புரட்சிகர இளைஞர் கழகம்-அகில இந்திய மாணவர் கழகம் நடத்திய இளைஞர்-மாணவர் மாநில சிறப்பு மாநாடு

2023 மார்ச் 31 தோழர் சந்திரசேகர் நினைவு நாள் அன்று மதுரை, நீதிபதி கிருஷ்ணய்யர் சமூக கூடத்தில் புரட்சிகர இளைஞர் கழகம் மற்றும் அகில இந்திய மாணவர் கழகத்தின் சார்பாக மாணவர் இளைஞர் சிறப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு தோழர்கள் தனவேல், பாலஅமுதன் தலைமை தாங்கினர். தோழர்கள் பெரோஸ் பாபு, உதுமான் அலி. சேலம் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தனர். மாநாட்டுக் கொடியை தோழர் மங்கையர்கரசி ஏற்றினார். தோழர் தேவராஜ் வரவேற்புரையாற்றினார். இகக(மாலெ) தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். இகக(மாலெ) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் வீ.சங்கர் சிறப்புரையாற்றினார்.

புரட்சிகர இளைஞர் கழகத்தின் அகில இந்திய மாநாடு

புரட்சிகர இளைஞர் கழகத்தின் 7வது அகில இந்திய மாநாடு செப்டம்பர் 10-11 தேதிகளில் ஜார்கண்ட் மாநிலத்தின் நீலாம்பர் பீதாம்பர் நகர் என்று அமைப்பாளர்களால் பெயரிடப்பட்ட, மேதினி நகரில் தொடங்கியது. 1857 கிளர்ச்சியின் தியாகிகளை கௌரவிக்கும் வகையில் மாநாட்டு இடம் நீலாம்பர் பீதாம்பர் நகர் என மறுபெயரிடப்பட்டிருந்தது. மாநாட்டின் பொது அமர்வை தோழர் திபங்கர் தொடங்கி வைத்தார்.