விசைத்தறி தொழிலாளர்களின் கூலி உயர்வு மேம்பட்ட பணி நிலைமைகள் வாழ்வாதாரத்துக்கான போராட்டங்கள் தொடரும்.

தமிழ்நாட்டில் விசைத்தறி முக்கிய வேலை அளிக்கும் தொழிலாக உள்ளது. குறிப்பாக நாமக்கல், சேலம் மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கானோர் பணிபுரியும் விசைத்தறிக் கூடங்கள் உள்ளன. தமிழ்நாட்டிற்கு செலவானியையும் வேலைவாய்ப்பையும் உரு வாக்கித் தருவதால் தமிழக அரசு விசைத்தறி உற்பத்திக்கு மட்டுமே என சில துணி ரகங்களை ஒதுக்கீடு செய்துள்ளது. அதேபோல் பாரம்பரிய தொழிலான கைத்தறி உற்பத்திக்கு என்று சில ரக துணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இத்தொழிலை பாதுகாப்பதாகச் சொல்லப்படுகிறது. தமிழக அரசு விசைத்தறிக் கூடங்களுக்கென இலவசமாக மின்சாரமும் வழங்குகிறது.