கனியாமூர்-வேங்கை வயல் முதல் அம்பை-உடன்குடி வரை

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கையை துரிதமாக எடுப்போம்... இந்த அரசைப் பொறுத்தவரை, குற்றச் செயல்களில் ஈடுபடுவோர், அதிலும் குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மனித குலத்துக்கே ஓர் அவமானச் சின்னம் என்று கருதுகிறோம். அந்த வகையில் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி, கடுமையான நடவடிக்கையை துரிதமாக எடுப்போம் என்று ஏப்ரல் 12 அன்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.