கல்லறையாக மாறிவரும் ரயில் வண்டிகள்? ரயில் போக்குவரத்தில் பாதுகாப்பினை புறக்கணிக்கும் மோடி அரசின் குற்றச் செயலால் விளைந்த நிகழ்வுதான் பாலசோர் ரயில் விபத்து.

ஒடிசாவின் பத்ரக் மாவட்டத்தைச் சேர்ந்த சுகோ கிராமத்தின் முதியவர் ஒருவர், அங்கு பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான உடல்களுக்கு மத்தியில் நடந்து செல்கிறார். ஒன்றன் பின் ஒன்றாக இறந்த உடல்களின் மீது போர்த்தப்பட்டுள்ள துணியை தூக்கி அவர்களின் முகத்தைப் பார்க்கிறார். யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டதற்கு, "கோரமண்டல் விரைவுவண்டியில் பயணம் செய்த என் மகனைத் தேடுகிறேன். ஆனால் அவனை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை" என்று அழுதுகொண்டிருந்தவர் உடைந்த குரலில் பதிலளித்தார்.