Worker Peasant Unity

ஏஐசிசிடியு அறைகூவல்!

நவம்பர் 26, 2021.

தொழிலாளர்கள் - விவசாயிகள் ஒற்றுமை நாள்!

பெரும் வெற்றியடையச் செய்வோம்!

தொழிலாளர்களை, வேலை வாய்ப்பை, உரிமைகளை பாதுகாப்போம்!

விவசாயத்தை, விவசாயிகளைப் பாதுகாப்போம்!

தொழிலாளி - விவசாயி ஒற்றுமையை உயர்த்திப் பிடிப்போம்!

மோடி அரசாங்கத்தின் பிளவுபடுத்தும் மதவாத திட்டத்தை முறியடிப்போம்!

மோடி தலைமையிலான கம்பெனி ராஜ்ஜியத்தை முறியடிப்போம்!

மோடி-ஷா பிடியிலிருந்து இந்தியாவை விடுவிப்போம்!

நவம்பர்  17 - 25 பிரச்சார இயக்கம்.

பிரச்சார கோரிக்கைகள்.

  • ராக்கெட் வேகத்தில் உயரும் விலைவாசியை கட்டுப்படுத்து!
  • வேலையின்மைக்கு, ஆட்குறைப்புக்கு முடிவு கட்டு!
  • உணவுப் பாதுகாப்பை, பொது விநியோக திட்டத்தை பலப்படுத்து!
  • வேலையை, வேலை பெறும் உரிமையை உத்தரவாதப்படுத்து!
  • வேலை கோரும் அனைவருக்கும் தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில் வேலை வழங்கு!
  • நகர்ப்புற வறியவர்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்து!
  • 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை,3 வேளாண் சட்டங்களை நீக்கு!
  • 12 மணி நேர வேலை நாள் வேண்டாம்!
  • தொழிலாளர் உரிமைகளை, அவர்களை நிரந்தரம் செய்வதை உத்தரவாதம் செய்!
  • 100 சத அன்னிய நேரடி முதலீடு, கார்ப்பரேட் மயமாக்குதல் உள்ளிட்ட அனைத்து தனியார் மயமாக்க நடவடிக்கைகளையும் நிறுத்து!
  • தேசிய பணமாக்குதல் திட்டத்தை திரும்பப் பெறு!
  • தேசத்தின் சொத்துக்களை விற்பதை நிறுத்து!
  • ஊதியத்தை, சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை வெட்டி சுருக்குவதை நிறுத்து!
  • விவசாயத் தொழிலாளர்கள், கிராமப்புற தொழிலாளர்கள் உட்பட அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் மாதம் ரூபாய் 10,000 வருவாய் ஆதாரமாக வழங்கு!
  • பழைய ஓய்வூதிய திட்டத்தையே திரும்பக் கொண்டு வா!
  • திட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் குறைந்த பட்ச ஊதியம், சமூக பாதுகாப்பை உத்தரவாதம் செய்!
  • முன் களப் பணியாளர்கள் அனைவருக்கும் காப்பீட்டை பாதுகாப்பை உத்தரவாதம் செய்!
  • தேசத் துரோகச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA)  உட்பட அனைத்து கொடிய சட்டங்களையும் ரத்து செய்!
  • அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்!

போராடுவதற்காக ஒன்றுபடுவோம்!

வெற்றி பெறுவதற்காகப் போராடுவோம்!