மோடியை ஆட்சியைவிட்டு வெளியேற்ற ஒன்றிணைவோம்

திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது தமிழ்நாடு மாநில மாநாடு 2022 ஆகஸ்ட் 6-9 தேதிகளில் நடைபெற்றது. இம்மாநாட்டின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 6 அன்று, “சமூக நல்லிணக்கத்தைக் காப்போம், மாநில உரிமைகளை மீட்டெடுப்போம்” என்ற தலைப்பில் எழுச்சி மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் சிபிஐ(எம்எல்) மாநிலச் செயலாளர் தோழர் என்.கே.நடராஜன் கலந்து கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட காங்கிரஸ் கட்சித் தலைவர் அழகிரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சிபிஅய்(எம்) மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

எழுச்சி மாநாடு