பாசிச வன்முறையிலிருந்து விடுதலை கேட்டு அழுகிறது இந்தியா 75

ஒவ்வொரு வீட்டிலும் மூவண்ணக் கொடி. இந்த ஆகஸ்ட் 13-15க்கான மோடி அரசாங்கத்தின் அழைப்பு இது. இந்தியா விடுதலை பெற்ற 75வது ஆண்டில், 'விடுதலையின் அமுதப் பெருவிழா' என்று பெரிதும் விளம்பரப்படுத்தப் பட்ட அதிகாரபூர்வ கொண்டாட்டத்தின் உச்சம் இதுவாகத்தான் இருக்கும்.