வங்கிக் கடன் தள்ளுபடி: கார்பரேட்டுகளுக்கு சேவை புரிதல்

கடந்த எட்டு ஆண்டுகளில் பிஜேபி ஆட்சியின் கீழ், வங்கிக் கடன் தள்ளுபடிகளும் வங்கி மோசடிகளும் முன்னெப்போதும் இல்லாத அளவு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே யிருக்கின்றன. 2014 வரை நல்ல நிதி நிலையில் இருந்த பொதுத்துறை வங்கிகள், மோடி ஆட்சி தொடங்கியதில் இருந்து வீழ்ச்சியடையத் தொடங்கின. இந்தக் காலகட்டத்தில் தான், திருப்பிச் செலுத்தாத கோடிக்கணக்கான ரூபாய் கடன்களுடன் நாட்டை விட்டு ஓடிப்போகும் சுதந்திரம் கார்ப்பரேட் மோசடியாளர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. 24,000 கோடி பெரும் கடனுடன் நாட்டை விட்டு வெளியேறிய ரிஷி மிகச் சமீபத்திய முக்கியமான அகர்வால் மிகச் சமீபத்திய நபராவார்.