தலையங்கம்

அரியலூர் மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு அனிதாவின் பெயரைச் சூட்டியிருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அனிதா இன்னும் நினைவு கூரப்பட்டுக் கொண்டேயிருக்கிறார். ஆனால், அவர் என்ன காரணத்திற்காக தன் உயிரை மாய்த்துக் கொண்டாரோ அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை. நீட் தேர்வு ரத்து செய்ய தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் போடப்பட்டது. அது கண்டு கொள்ளப்படாமல் இருந்தபோது, நீட் தேர்வை ரத்து செய்ய சட்டமியற்றப்பட்டு ஆளுநர்கள் கண்டு கொள்ளாமல் விடப்பட்டு, இப்போது குடியரசுத் தலைவர்ஒப்புதலுக்காக ஆண்டுக் கணக்கில் காத்துக் கொண்டிருக்கிறது.