மே நாள் அறைகூவல் 2023 இந்திய மே நாள் நூறாண்டு நிறைவு!

இந்தியாவிலேயே முதல் மே நாள் கொடி ஏற்றப்பட்டது சென்னை மெரீனா கடற்கரையில்தான். மே 1, 1923 அன்று, தோழர் சிங்காரவேலரால் சென்னையில் முதல் மே நாள் கொடி ஏற்றப்பட்டது. அதே போல, சென்னையில்தான் முதல் தொழிற்சங்கமும் தோழர் சிங்காரவேலரால் துவக்கப்பட்டது. 2023ல் இந்திய தொழிலாளர் வர்க்கம் அனுசரிக்கும் மே முதல் நாள், மே நாள் கொண்டாட்டத்தின், மே நாள் சூளுரையின் ஒரு நூற்றாண்டு நிறைவைக் குறிப்பதாகும்.