இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தெளிவற்ற, நடைமுறைச் சாத்தியமற்ற தொலைதூர வாக்களிப்புத் திட்டம்

உள்நாட்டில் புலம்பெயர்ந்தோருக்கான தொலை தூர வாக்களிப்பை அறிமுகப்படுத்தும் இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்மொழிவுக்கு, பிப்ரவரி 27, 2023 தேதியிட்ட கடிதத்தின் மூலம் இகக (மாலெ) எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இந்த முன்மொழிவு நடைமுறை சாத்தியமற்றது, முற்றிலும் தெளிவற்றது என்று  கூறியுள்ள இகக(மாலெ), வாக்களிக்கும் குறிக்கோள் மற்றும் நோக்கத்திற்காக உள்நாட்டில் புலம்பெயர்ந்தோர் பற்றிய எந்தவொரு உறுதியான வரையறையையும் வழங்காமல், இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு முன்மாதிரி மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை உருவாக்குவதை நோக்கி அவசரமாக செயல்படு வது குறித்து தீவிர கவலைகளை எழுப்பியுள்ளது.