இந்தியாவின் 100ஆவது மே நாள்

தோழர் சிங்காரவேலரால் 1923 மே 1 அன்று சென்னை மெரினா கடற்கரையில் இந்தியாவின் முதல் மே நாள் கொடி ஏற்றப்பட்டது. 2023 மே 1 இந்தியாவின் 100ஆவது மே நாள். இந்த மே நாளில் கார்ப்பரேட் ஆதரவு காவிப் பாசிசத்தை இந்தியாவை விட்டே வெளியேற்றும் இலட்சியத் தோடு இகக(மாலெ), ஏஐசிசிடியு சார்பாகமே 1 அன்று நாடெங்கும் பேரணிகள், பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கொடியேற்றுதல், உறுதியேற்புக் கூட்டங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தமிழ்நாட்டில் செங்கற்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் மே 1 அன்று மாலை பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றன.