*அமைச்சர் செந்தில் பாலாஜி கைது* *எதிர்க்கட்சிகளுக்கு அச்சுறுத்தல்;* *மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!*

தமிழ்நாட்டில் பாஜக தனது தேர்தல் தயாரிப்பை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்து தொடங்கியிருக்கிறது. அமித்ஷாவின் வருகை மக்கள் மத்தியில் எவ்விதமான செல்வாக்கையும் ஏற்படுத்த தவறிவிட்டது. இதனால் விரக்தி அடைந்துள்ள அமித்ஷாவும் அண்ணாமலையும் அமைச்சர் செந்தில் பாலாஜி அலுவலகம், வீடுகளில் சோதனை செய்ததோடு நிறுத்தாமல் நள்ளிரவில் கைதும் செய்திருக்கிறது. இதன்மூலம் கோவை மண்டலத்தில் சரிந்துபோன பாஜக செல்வாக்கை தூக்கி நிறுத்தி விடலாம் என்று கனவு காண்கிறது. பாஜக குறிவைக்கும் ஒவ்வொரு தொகுதிக்கும் இப்படி ஒரு சர்வாதிகார செயலை அரங்கேற்ற திட்டமிட்டுள்ளது என்பதும் தெரிகிறது.