அம்பேத்கர் சுடர்: தோழர் திபங்கர்

1960 டிசம்பரில், அசாம் மாநிலம் கவுகாத்தியில் பிறந்த தோழர் திபங்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) பொதுச் செயலாளராக செயலாற்றி வருகிறார். இந்தியாவில் ஒரு முன்னணி கம்யூனிஸ்ட் தலைவராகத் திகழும் தோழர் திபங்கர் அவர்களின் உறுதியான அர்ப்பணிப்பு மிக்க ஒப்பற்ற பங்களிப்பிற்கு இந்த விருது ஒரு சான்றாகும். அவரது ஒப்பற்ற வாழ்க்கை முழுவதையும், கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளை, இந்திய மக்களின் சமூக மற்றும் பொருளாதார நீதிக்காக அர்ப்பணித்து, உண்மையான கம்யூனிச உணர்வுக்கு உதாரணமாகத் திகழ்கிறார் தோழர் திபங்கர்.