வெகுமக்களிடம் செல்வோம்; வெகுமக்களை வெல்வோம்! (ஜூன் 15-30 பரப்புரை இயக்கத்தை நோக்கி....)

கட்சி தோற்றுவிக்கப்பட்ட நாளான ஏப்ரல் 22 அன்று கிளைகள் தோறும் கட்சிக் கொடி ஏற்றுவது, ஏப்ரல் 22 உறுதிமொழி ஏற்பதற்கான அழைப்பை, கட்சி மத்தியக் கமிட்டி விடுத்திருந்தது. கட்சி மாநிலச் செயலாளர், ஆசைத்தம்பி, புதுக்கோட்டை பொறுப்பாளர் பாலசுந்தரம் கலந்துகொண்ட புதுக்கோட்டை மாவட்டக்கமிட்டிக் கூட்டத்தில், ஏப்ரல் 17 அன்று மத்தியக் கமிட்டி அழைப்பை செயல் படுத்துவது குறித்து விரிவாக திட்டமிடப் பட்டது. கட்சி வேலைகள் உள்ள 7 ஒன்றியங் களில் மொத்தம் 57 கிளைகளில் கட்சிக் கொடியேற்றம் உறுதி மொழி ஏற்பது என்று திட்டமிடப்பட்டது.