தலையங்கம்:பாசிசத்தின் பிணந்தின்னும் சாத்திரங்கள்

குஜராத்தில் நடந்த இஸ்லாமிய இன அழிப்பு தொடர்பாக. பல்வேறு தடயங்களைச் சேகரித்து, அந்த இன அழிப்பினால் பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு உள்ளிட்டோருக்காக உச்ச நீதிமன்றம் வரை சென்ற, சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வத்தை, தற்போது சிறைக்குச் செல்ல உத்தரவிட்டது உயர் நீதிமன்றம். பில்கிஸ் பானுவை வன்புணர்வு செய்து, அவரின் 3 வயதுக் குழந்தையைக் கொன்று. ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகள் 75வது சுதந்திர தினத்தின்போது குஜராத் அரசால் விடுவிக்கப்பட்டார்கள்.