குற்றவாளி கூண்டில் பாஜக-என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி!

மார்ச் 2 அன்று புதுச்சேரியில் ஒன்பது வயது பெண் குழந்தை கடத்தப்பட்டு மூன்று நாட்கள் கழித்து உள்ளூர் வாய்க்காலிலேயே பிணமாகக் கிடந்தது. இது, புதுச்சேரி மட்டுமின்றி, கேள்விப்பட்டோர் நெஞ்சை எல்லாம் உறைய வைக்கும் கொடூரச் சம்பவமாகும். பாஜக- என்ஆர்கே ஆட்சியின், பொருளாதார வளர்ச்சியை சீரழிக்கும் சுற்றுலா, போதைக் கலாச்சாரத்தின் கோரமுகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.