தொழிலாளர்கள் மீது மோடி தொடுக்கும் பத்தாண்டு காலப் போர்!

மோடியின் பேரழிவுவாத நடவடிக்கைகள் அனைத்தும் மக்கள் நலனிலிருந்து தான் என சொல்லப்படுகிறது. தேர்தலில் வெளிப்படைத்தன்மைக்காகத்தான் தேர்தல் பத்திரம், விவசாயிகளின் நலனில் இருந்து தான் வேளாண் சட்டங்கள், காஷ்மீர் மக்களின் நலன் காக்கத் தான் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து, வழக்கறிஞர்கள், வழக்காடிகள் நலனில் இருந்து தான் புதிய குற்றவியல் சட்டங்கள், பெண்கள் நலனிலிருந்து தான் பொது சிவில் சட்டம், தொழிலாளர்களை பாதுகாக்கத் தான் தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் என்கிறார்கள். சுதந்திரப் போராட்டத்தின் ஊடாக பெற்ற, அரசியலமைப்புச் சட்டத்தின் ஊடாக பெற்ற மக்களின் உரிமைகளை ஒவ்வொன்றாக பறித்து வருகிறார்கள்.