ஆட்சியிலிருந்தும் சமூகத்திலிருந்தும் பாஜகவை அகற்றுவதே நமது இலக்கு

பாட்னா மாவட்ட 12வது மாநாட்டை யொட்டி புல்வாரி சரிப் என்ற இடத்தில் 2022 செப்டம்பர் 8 அன்று நடைபெற்ற குடிமக்கள் கருத்தரங்கில் பேசிய இகக(மாலெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர், பாஜக போன்ற பாசிச சக்திகளை ஆட்சியிலிருந்து மட்டுமல்ல, சமூகத்திலிருந்தே அகற்றிட வேண்டும் என்றார். பீகார் காட்டிய பாதையின் வழிசென்று, 2024ல் பாஜக அபாயத்தில் இருந்து நாட்டை நாம் கண்டிப்பாக விடுவிக்க முடியும்.