நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே சமயத்தில் தேர்தல் என்ற முன்மொழிவு அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி முறையின் அடிப்படை உணர்வுகளை அரித்துப்போகச் செய்யும்: இகக(மாலெ)

நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான சட்ட ஆணையத்தின் கடிதத்திற்கு இகக(மாலெ) அளித்துள்ள பதிலில் இந்த முன்மொழிவு அரச மைப்புச் சட்டத்திற்கு விரோதமானது, ஜனநாயகத் துக்கு விரோதமானது என்று சொல்லி கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறது. ஒரே சமயத்தில் தேர்தல் என்பது ஜனநாயகத்திற்கும் கூட்டாட்சி முறைக்கும் சாவு மணி அடிக்கிற செயலாகும்.

தோழர்.என்.கே.நடராஜன் அவர்களுக்கு செவ்வணக்கம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மத்தியக் கமிட்டி, தோழர் என்.கேவின் திடீர் மரணத்திற்கு தன்னுடைய ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறது.

நீண்ட கால கட்சியின் முன்னணி ஊழியரான தோழர் என்.கே, தமிழக கட்சி வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் கட்சிப் பொறுப்புகளை முன்மாதிரியான கடப்பாற்றுடனும் விடாமுயற்சியுடன் நிறைவேற்றி வந்திருக்கிறார். அவரது 40 ஆண்டுகால நீடித்த கட்சி வாழ்க்கையில் அவர் தொழிலாளர் வர்க்கத்தின் மீது கடப்பாடு கொண்ட கம்யூனிஸ்ட் அமைப்பாளராக பல துறைகளிலும் பல மாவட்டங்களிலும் செயலாற்றி இருக்கிறார்.