AISA - RYA அகில இந்திய மாணவர் கழகம் புரட்சிகர இளைஞர் கழகம் நடத்தும் மாணவர் - இளைஞர் மாநில மாநாடு 31 மார்ச் 2023

மோடியின் பிஜேபி அரசு, கல்வியைத் தனியார் முதலாளிகளுக்கு, கார்ப்பரேட் கல்வி மாஃபியாக்களுக்கு, வெளிநாட்டு கம்பெனிகளுக்கு விலை கூவி விற்று வருகிறது.

வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை இந்தியாவில் திறக்கிரோம், வெளிநாட்டுக் கல்வியை இந்தியாவில் வழங்குகிறோம் என்ற பெயரில், மேலை நாடுகளின் கல்வி குப்பைக் கூடமாய் இந்தியக் கல்வி முறை மாற்றப்படுகிறது. மேலை நாடுகளின் தரமற்ற கல்வி நிறுவனங்களுக்கு இந்திய கல்விச் சந்தையில் இடம் அளிக்கப்படுகிறது.