நீதிக்கான போராட்டத்தில், ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் ஒன்று சேருவோம். அதுதான் தோழர் சந்திரபோசுக்கு செலுத்தும் பொருத்தமான அஞ்சலி

அனைவருக்கும் வணக்கம்!

தோழர் சந்திரபோஸ் நினைவஞ்சலி கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ள கட்சி சிவகங்கை மாவட்டத் தலைமைக் குழுவுக்கு பாராட்டுகள்.

தோழர் செந்தமிழ், இது கந்தக பூமி என்று சொன்னார். இந்த பூமியை எந்தப் பக்கம் உரசினாலும் தீப்பிடித்துக்கொள்ளும் என்று சொன்னாரா? எப்படி வேண்டுமானாலும் தீப்பிடித்துக்கொள்ளும் என்று சொன்னாரா? எப்போது வேண்டுமானாலும் தீப்பிடித்துக் கொள்ளும் என்று சொன்னாரா? தெரியவில்லை. அவர்தான் சொல்ல வேண்டும்.