பாலின நீதியும் சமத்துவமும் வேண்டும்; பொது சிவில் சட்டம் என்ற பெயரில் வகுப்புவாத துருவச் சேர்க்கையை ஏற்படுத்தும், முஸ்லிம்களை தீயவர்களாக சித்தரிக்கும் அரசியல் வேண்டாம்!

போபாலில் வாக்குச்சாவடி மட்ட அளவிலுள்ள பாஜக தொண்டர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் போது, பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக உரத்த கூச்சலை எழுப்பினார்கள். சிறிது நேரத்தில், அதே மாநிலத்தில் இருந்து, அதிகார போதையில் மிதந்த பாஜக இளைஞரணித் தலைவரான பிரவேஷ் சுக்லா, தஸ்மத் ராவத் எனும் ஆதிவாசி தொழிலாளி மீது சிறுநீர் கழிக்கும் காணொளி வெளியாகி, சமூக ஊடகங்களில் அதிவேகமாகப் பரவியது. இருபதாண்டுகளாக பாஜக ஆட்சியில் இருக்கும் மத்தியப் பிரதேசத்தில் உண்மையிலேயே களத்தில் நிலவும் அநாகரிக நடத்தையை, காட்சிகளை அதிர்ச்சியூட்டும் இந்தக் காணொளி சித்தரித்துக் காட்டியது.