ஏழு இடைத்தேர்தல்களும் சுட்டிக்காட்டும் செய்தி

செப்டம்பர் 5 அன்று நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. ஒட்டுமொத்த முடிவுகளையும் பார்த்த மாத்திரத்தில், மாற்றம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை எனலாம். தேசிய ஜனநாயகக் கூட்டணி 3 இடங்களிலும், இந்தியா கூட்டணி 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆனால், கூர்ந்து கவனித்தால் அடிமட்டத்தில் நிறைய மாற்றங்கள் நடந்திருப்பது வெளிப்படுகிறது. மக்களவைக்கு அதிக உறுப்பினர்களை அனுப்பும் உத்தரப்பிரதேசத்தில் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.கோசி தொகுதி இடைத்தேர்தல் (சட்டமன்ற உறுப்பினரின்) மரணத்தின் காரணமாக நடைபெறவில்லை. மாறாக, அவர் கட்சி தாவியதன் காரணமாக நடைபெற்றது.