RSS Shakha Tamil

*கோவை தர்மசாஸ்தா தனியார் பள்ளிக்குள் ஆர்எஸ்எஸ் சாகா பயிற்சி!
*கண்டித்து போராட்டம் செய்த ஜனநாயக அமைப்புகள், தோழர்கள் மீது காவல்துறை பொய்வழக்கு !

*இக க (மாலெ) கடும் கண்டனம்!*

நேற்று கோவை விளாங்குறிச்சி ரோடில்  உள்ள தர்மசாஸ்தா பள்ளிக்குள், 
மதவெறுப்புகளை உருவாக்கி சமூக ஒற்றுமைக்கு தீங்கு விளைவிக்கும் ஆர்எஸ்எஸ்
சாகா நடத்தப்படுவதை அறிந்து, அதை தடை செய்யக் கோரி, பள்ளி வாயிலின் முன்னால் அறவழியில் முழக்கங்கள் எழுப்பிய இடதுசாரிகள், பெரியாரியவாதிகள், அம்பேத்கரியவாதிகள் ஆகியோர் கைது செய்யப்பட்டு 31 பேர் மீது கொரோனா விதிகளை சுட்டிக் காட்டி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர்களது கைதுக்குப் பின்னால்,  போராட்டத்தில் பங்கேற்க பள்ளியின் வாயிலுக்கு வருகை புரிந்த
தோழர்கள் மீது, பள்ளிக்குள் இருந்த சில ஆர்எஸ்எஸ் குண்டர்கள் தடிகளோடு ஓடிவந்து அங்கிருந்த
சிபிஐ-எம்எல் (விடுதலை) கோவை மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர் ஜூலியஸ் ஆகியோரை
தாக்கியுள்ளனர்.

பெருமளவில் காவல்துறை பள்ளி வளாகத்தில் இருந்தபோதிலும், ஆர்எஸ்எஸ் சாகாவை தடுத்து நிறுத்தவில்லை என்பதும், தாக்குதல் நடத்திய ஆர்எஸ்எஸ் குண்டர்களை தடுத்து நிறுத்தவில்லை என்பதும் கண்டனத்துக்கு உரியதாகும்.

உண்மைச் சம்பவம் இப்படியிருக்க, காவல்துறை ஏட்டை பணிசெய்யவிடாமல் தடுத்ததாக தோழர்கள். பாலசுப்பிரமணியன் மற்றும் ஜூலியஸ் மீது, பிணையில் வரமுடியாத பிரிவுகளில், பீளமேடு காவல் நிலையம் பொய்வழக்கு
போட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.

காவல்துறை ஆர் எஸ் எஸ் சின் ஆதரவாளர்கள் போல, குறிப்பாக கோவையில், செயல்படும் நிலை, திமுக ஆட்சியின் நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்குகிறது
பாஜக தலைவர்கள் விருப்பப்படியும், புரட்சிகர அமைப்புகளின் செயல்பாடுகளை முடக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வழக்கு போடப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. அது மட்டுமல்லாமல், தோழர் பாலசுப்ரமணியனை தாக்கியவர்களை இன்னும் கைது செய்யவில்லை.

தமிழ்நாட்டில்,
மதவெறியை வளர்க்க முற்படும் ஆர்எஸ்எஸ் பயங்கரவாத சக்திகளுக்கு எதிராக இடது, பெரியாரிய, அம்பேத்கரிய, ஜனநாயக சக்திகள் அவசர அவசியமாக முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.


தமிழக அரசே! 

¶தோழர்கள் பாலசுப்பிரமணியன்,ஜூலியஸ் மீதான பொய் வழக்கை திரும்பப் பெறு! 

¶மதவெறி வன்முறை வளர்க்கும் தர்மசாஸ்தா பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடு!

¶தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் ஆர்எஸ்எஸ் நடத்தும் சாகாக்களை தடைசெய்! 

¶தமிழகத்தின் கோவை, நாகர்கோவில் போன்ற சில மாவட்டங்களில் காவல்துறையின் மதவாத சாயலை மாற்றி அமைத்திடு! 


¶தமிழ்நாட்டில் சங்பரிவார் முயற்சிகளுக்கு துணைபோகும் காவல்துறையில் களையெடுப்பு நடத்து! பணிநீக்கம் செய்!

இ.க.க. (மாலெ) விடுதலை
தமிழ்நாடு மாநில கமிட்டி
Cpi-Ml Tamilnadu