ஆதிதிராவிடர், பழங்குடி பள்ளிகளை கல்வித்துறையோடு இணைப்பதை தமிழ்நாடு அரசு நிறுத்தி வைக்க வேண்டும். இகக(மாலெ) வலியுறுத்தல்!

முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற மாநில விழிப்புணர்வு, உயர்நிலை கண்காணிப்புக் குழுக்கூட்டங்களில் வந்த வேண்டுகோள்களை அடுத்து ஆதிதிராவிடர்/பழங்குடி, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர், இந்து அறநிலையத்துறை, வனத்துறை பள்ளி, கல்லூரிகளை அரசின் கல்வித்துறையின் கீழ் கொண்டு வருவது என்றும் இவற்றில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்கள் பணி பாதுகாக்கப்படும் என்றும் 2023-24 நிதிநிலை அறிக்கையில் அப்போதைய நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார்.