அடுத்த நாற்பது ஆண்டுகளுக்கும் இந்தியாவில் புல்டோசர் ஆட்சி நடத்த முயற்சிக்கும் பாஜகவின் திட்டத்தை முறியடிப்போம்!

முகமது நபியை இழிவுபடுத்தும் வகையில் பாஜகவின் தேசிய பேச்சாளர் நுபுர் சர்மா கூறிய கருத்தானது உலகம் முழுவதும் எதிர்ப்புப் புயலைத் தூண்டிவிட்டது மட்டுமின்றி, இந்தியாவில் பல அடுக்கான ஒரு இருண்ட சதிச் செயல் போன்ற நடவடிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்த நாட்டின் சட்டத்தின் படி நுபுர் சர்மா மீது நடவடிக்கை எடுப்பதற்கு மோடி அரசாங்கம் மறுக்கிறது. அவருடைய கருத்தை, ஓரஞ்சாரத்தில் உள்ளவர் சொன்ன ஒன்றுமில்லாத விசயம் என ஒதுக்க முயற்சிக்கிறது. அது எதிர்பார்த்தது போலவே இந்தியாவெங்கும் பல்வேறு இடங்களில் பொதுமக்களின் கோபத்தைக் கிளறியது. இஸ்லாமியர்கள் பெரும் எண்ணிக் கையில் போராட்டங்கள் நடத்தி னார்கள்.