இகக(மாலெ) பொதுச் செயலாளர் திபங்கருடன் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் சந்திப்பு

7.9.2022 அன்று டெல்லியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மத்திய அலுவலகத்தில் இகக(மாலெ) பொதுச் செயலாளர் திபங்கரும் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரும் சந்தித்துக் கொண்டனர். பாஜகவின் புல்டோசர் ராஜ்ஜியத்தை தடுத்து நிறுத்திட செயலூக்கமுள்ள பரந்த எதிர்க்கட்சி ஒற்றுமையைக் கட்டமைக்க வேண்டியதன் அவசரத் தேவை பற்றி அவர்கள் விவாதித்தார்கள். பீகாரின் பற்றி எரியும் பிரச்சனைகளும் விவாதத்தில் இடம் பெற்றன. ஜோடிக்கப்பட்ட வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய ஒன்றுபட்ட முயற்சியின் அவசர தேவை பற்றியும் இகக(மாலெ) பொதுச்செயலாளர் எழுப்பினார்.

தோழர் திபங்கர் தலைமையிலான குழு முதல்வர் நிதிஷ்குமாரை சந்தித்தது

தோழர் திபங்கர் தலைமையிலான குழு முதல்வர் நிதிஷ்குமாரை சந்தித்தது
மாநிலச் செயலாளர் குணால், பொலிட்பீரோ உறுப்பினர் திரேந்திர ஜா, ராஜாராம் சிங், கே.டி.யாதவ், சட்டமன்றக் குழுத் தலைவர் மஹ்பூப் ஆலம் மற்றும் துணைத் தலைவர் சத்யதேவ் ராம், மீனா திவாரி, சக்ஷி யாதவ் ஆகியோர் அடங்கிய சிபிஐஎம்எல் பொதுச் செயலாளர் திபங்கர் தலைமையிலான குழு பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை 2022 ஆகஸ்ட் 13ம் தேதி சந்தித்தது.