மே நாள் அறைகூவல் 2023 இந்திய மே நாள் நூறாண்டு நிறைவு!

இந்தியாவிலேயே முதல் மே நாள் கொடி ஏற்றப்பட்டது சென்னை மெரீனா கடற்கரையில்தான். மே 1, 1923 அன்று, தோழர் சிங்காரவேலரால் சென்னையில் முதல் மே நாள் கொடி ஏற்றப்பட்டது. அதே போல, சென்னையில்தான் முதல் தொழிற்சங்கமும் தோழர் சிங்காரவேலரால் துவக்கப்பட்டது. 2023ல் இந்திய தொழிலாளர் வர்க்கம் அனுசரிக்கும் மே முதல் நாள், மே நாள் கொண்டாட்டத்தின், மே நாள் சூளுரையின் ஒரு நூற்றாண்டு நிறைவைக் குறிப்பதாகும்.

இந்திய விடுதலைப் போரில் கம்யூனிஸ்ட்டுகளும் தொழிலாளர்களும் தமிழ்நாடும்

இந்திய நாடு ஆங்கிலேயரிடமிருந்து விடுதலையடைந்த 75 ஆம் ஆண்டில், அதை அனனவரும் கொண்டாட வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறார்கள் ஆட்சியாளர்கள். இந்த ஆட்சியாளர்கள் யார் என்றால், விடுதலைக்காகப் போராடியவர்களை ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்தவர்களின் வாரிசுகள். ஆங்கிலேயர் களிடம் தங்களுக்குச் சேவை செய்யக் கடன்பட்டுள்ளேன், என்னை சிறையில் இருந்து விடுவித்திடுங்கள் என்று மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்த சாவர்க்கரின் வாரிசுகள். நாட்டு விடுதலைப் போரின் போது ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக, இந்திய நாட்டை மதரீதியாகத் துண்டாடத் துடித்த கோல்வார்க்கரின் வாரிசுகள் சனாதன இந்துமத வெறி கோட்சே வாரிசுகள்.