தலையங்கம்

அக்டோபர் 2, காந்தி பிறந்த நாள் அன்று ஆர்எஸ்எஸ் தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் பேரணி நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றம் சென்றது. சென்னை உயர்நீதிமன்றமும் நிபந்தனைகளுடன் தமிழ்நாடு காவல்துறை அனுமதி அளிக்க உத்தரவிட்டது. சுமார் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆர்எஸ்எஸ் தமிழ்நாட்டில் பேரணி நடத்த அனுமதி கோரியது. அது அனுமதி கோரிய நாள்தான் மிகவும் கவனிக்கப் பட வேண்டிய ஒன்றாகும். ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த கோட்சே அக்டோபர் 2 அன்றுதான் காந்தியைக் கொன்றார். அந்த அக்டோபர் 2ஐ திட்டமிட்டு காந்தியை சிறுமைப்படுத்தும் வகையில் அந்த நாளைத் தேர்வு செய்துள்ளார்கள்.