பிரியாவிடை தோழர் என். கே

நான் மட்டுமல்ல வேறு யாரும் கூட அதை நம்ப மறுப்பார்கள். ஆனால், அது திடீரென்று நடந்து முடிந்து விட்டது. நமது இதயத்தை சுக்குநூறாக்கும் உண்மை செய்தியாகிவிட்டது. நமக்கு மட்டுமல்ல, தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என நான்கு திசைகளிலும் வெவ்வேறு மொழி பேசும் மக்களுக்கு தோழர்.என்.கே வின் நண்பர்களுக்கு, சொந்த பந்தங்களுக்கும் கூட. அதேபோல் நாட்டுப்புற, நகர்ப்புற தொழிலாளர்களுக்கு, பிரிக்கால் தொழிலாளர்கள் முதல் தூய்மைப் பணியாளர்கள், திட்டத் தொழிலாளர்கள் வரை எல்லோரும் அவரை வெகுமக்கள் தலைவராகப் பார்த்தார்கள். அவர்களின் கோரிக்கைக்காக நிற்கக்கூடிய தலைவராகப் பார்த்தார்கள்.