குஜராத் இனப்படுகொலை: உண்மை தொடர்ந்து விரட்டிக் கொண்டே இருக்கும்

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடுத்து குஜராத்தில் கொடூர படுகொலை நிகழ்ந்த போது, குஜராத்தின் அப்போதைய முதல்வராக இருந்த மோடியின் பாத்திரம் குறித்து பிபிசி (பிரிட்டிஷ் பிராட்கேஸ்ட் கார்ப்பரேஷன்) "இந்தியா: மோடி பற்றிய கேள்வி” என்று இரண்டு பகுதிகளாக தயாரித்திருக்கும் ஆவணப்படத்தின் முதல் அத்தியாயம் ஜனவரி 17 அன்று ஒளிபரப்பப் பட்டது. அந்தப் படம் இந்தியாவில் ஒளிபரப்பப் படவில்லை. மோடி அரசாங்கம் இந்தப் படம் சம்பந்தமான ட்விட்டர் பதிவுகள், இணைப்பு களை ட்விட்டர் நிறுவனம் நீக்கி விடுமாறும் யூ ட்யூப் நிறுவனம் அந்த காணொளிகளை அல்லது காட்சிகளை பதிவேற்றம் செய்வதை நிறுத்திடு மாறும் கேட்டுக் கொண்டது.