குடியரசு நாளில் என்எல்சிக்கு எதிராக கருப்புக் கொடி?!

1956ல் தொடங்கப்பட்டது நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம். தமிழ்நாட்டின் பெருமையாகவும் வளர்ச்சியாகவும் பேசப் பட்டது. ஆண்டுக்கு ரூ 11,900 கோடி லாப மீட்டு கிறது என்எல்சி. ஆட்சியாளர்கள், "நவரத்னா" நிறுவனம் என்று மார்தட்டிக் கொள்கின்றனர்.

இந்தியாவின் பல மாநிலங்களிலும் விரிவு படுத்தியுள்ளனர். இப்போது, நெய்வேலி நிறுவனத்தை இந்திய நிறுவனமாக மாற்றியும் விட்டனர். பல தனியார் முதலைகளின் கண்ணை உறுத்துகிறது என்எல்சி இந்தியா!