தலையங்கம்:பொய்ப் பிரச்சாரகர்களும் பசுக் குண்டர்களும்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னுடைய அடுத்த அவதூறுப் பிரச்சார ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளார். இப்போது அவர் கார்ல் மார்க்ஸை நேரடியாகக் குறி வைத்துவிட்டார். கார்ல் மார்க்ஸின் சிந்தனை இந்தியாவைச் சிதைத்துவிட்டது என்கிறார். கூடவே டார்வினையும் வம்புக்கிழுக்கிறார். 'இழப்பதற்கு ஏதுமில்லை, அடிமை விலங்கைத் தவிர, அடைவதற்கோ ஒரு பொன்னுலகம் இருக்கிறது, உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்' என்று கூறி மானுட குலம் தழைத்தோங்க வறுமையில் வாடிய மாமேதை கார்ல் மார்க்ஸ். அவரைப்பற்றி ஆயிரக்கணக்கான பணியாளர்களுடன் ராஜ் பவனில், மக்கள் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழும் ஆர்.என்.ரவி பேசுகிறார்!.