தலையங்கம்

ஏப்ரல் 15 அன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பு நடந்து கொண்டிருக்க, பிரயாக்ராஜ் மாவட்டத்தின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஸ்ரப் அகமது இருவரும் தண்டனைக் கைதிகளாக போலீஸார் புடை சூழ கையில் விலங்குடன் அழைத்துச் செல்லப்படும்போது, அவர்களுக்கு மிக அருகில் வந்து சங் பரிவார் குண்டர்கள் அவர்களைச் சுட்டுக் கொல்கிறார்கள். அவர்களைக் கொல்லும் போது ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிடுகிறார்கள். அவர்கள் இருவரும் இறக்கும் வரை சுடுகிறார்கள். அதை போலீஸார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.