டாஸ்மாக் தொழிலாளர்கள் வாழ்வும் பாதுகாக்கப்பட வேண்டும்

தமிழ்நாட்டில் டாஸ்மாக் தொழிலாளர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிபவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இதுநாள் வரை பணி வரன்முறை காலமுறை ஊதியம் கிடையாது. அவர்கள் வாங்கும் தொகுப் பூதியத்தில் உயர்வு அளித்தாலும் கூட அவர்கள் வாங்கும் சம்பளம் மிகவும் சொற்பமே. மேற்பார்வையாளர் ரூ.13,750ம், விற்பனையாளர் ரூ.11,600ம், உதவி விற்பனையாளர் ரூ.11,500ம் தான் பெற்றுவருகின்றனர். சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சட்டப்படியான வார விடுமுறை, தேசிய பண்டிகை விடுமுறை, மிகை நேர ஊதியம் போன்ற எதுவும் கிடையாது.