பெண்களுக்கு எதிரான அனைத்து மகளிர் காவல்நிலையங்கள்

1992ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கில் முதல் அனைத்து மகளிர் காவல்நிலையம் துவங்கப் பட்டது. அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, வரலாற்றில் இல்லாத முன்மாதிரி என்று வர்ணித்தார். பெண்கள் தங்களின் பிரச்சனைகளை ஆண் காவலர் களிடம் வெளிப்படுத்துவதில், காவல்நிலையத்தை அணுகுவதில் உள்ள பிரச்சனைகளைக் களைவதற் காகத்தான் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்படுவதாக அவர் அறிவித்தார். பெண் களுக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்காகவும் திருமண உறவுப் பிரச்சனைகளை விசாரிப்பதற் காகவும் அனைத்து மகளிர் காவல்நிலையங்கள் அமைக்கப்பட்டதென்று 2013-2014 சட்டமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்த அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் நிலமீட்பு போராட்டங்கள்

நகர்மயமாதல் அதிகமாகிவருகிறது. அதன் தாக்கம் கிராமப்புற பகுதிகளுக்கும் பரவுகிறது. பெருநகரங்களுடன் சாலைகளால் இணைக்கப் பட்டுள்ள பேரூராட்சிகளின் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. கிராமங்களில், தங்கள் தங்கள் சாதி வளைகளில் சிக்குண்ட மக்கள் குடியிருப்புகள் போதாமல் விழிபிதுங்குகின்றன. அவர்கள் தங்களுக்கான புதிய வீடுகளைக் கட்டிக்கொள்ளாதபடி, நிலத்தின் விலை அதிகரிப்பும், சாதிச் சுவர்களும் தடுக்கின்றனர். இதனால் கிராமப்புறங்களில் வீட்டுமனைக்கான தேவை அதிகரித்தும் வீடுகளை உருவாக்கிக் கொள்ள முடியாத நிலை இருக்கிறது.

மோடிக்கு எதிரான கிராம மக்களின் கோபத்திற்கு வடிவம் கொடுப்போம்! மோடியின் முயற்சியை முறியடித்து வேலை உறுதித் திட்டத்தைக் காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக் கோருவோம்!

ஜூலை மாதத்தின் கடைசி வாரத்தில் நாடாளுமன்றத்தில் கிராமப்புற வளர்ச்சி அமைச்சர் கிரிராஜ் சிங் எழுத்துப்பூர்வமான அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தார். 2022-23 நிதியாண்டு காலத்தில் இதுவரை 5 கோடி தொழிலாளர்களின் பெயர்களை வேலை உறுதித் திட்டத்திலிருந்து நீக்கி இருப்பதாக அவர் தெரிவித்தார். இது சென்ற ஆண்டான 2021-2022 காட்டிலும் 247 சதம் அதிகமானதாகும்.

தமிழகத்திற்கான தனித்துவமான கல்விக்கொள்கையை நோக்கிய இரண்டு பாதைகள்

அதிமுக-பாஜக பிற்போக்குக் கூட்டணியை வென்று, தி.மு.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, 2021-22ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும்போது, 'மாநிலத்திற்கென புதிய கல்விக் கொள்கையை உருவாக்க ஒரு குழு அமைக்கப்படும், தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கென தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர் மட்டக் குழு ஒன்றை இந்த அரசு நியமிக்கும்' என அறிவிக்கப்பட்டது. 2022 ஜூன் 1 அன்று தமிழக அரசு அரசாணை எண் 98யை வெளியிட்டது.