வாச்சாத்தி வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை, சிபிஐஎம்எல் கட்சி வரவேற்கிறது!

தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி மலை கிராமத்தில் நூற்றுக்கணக்கான பழங்குடியினர் மீது, கடந்த 1992ல் நிகழ்த்தப்பட்ட வன்கொடுமை வழக்கில் தர்மபுரி அமர்வு நீதிமன்றம் வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய் துறை ஆகியவற்றைச் சேர்ந்த 215 குற்றவாளிகளுக்கு சிறைத்தண்டனைகளை வழங்கியது. அதன் மீது சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் செய்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிப்படுத்தி வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இதை சிபிஐஎம்எல் கட்சி வரவேற்கிறது.