இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல்: இகக(மாலெ) கடும் கண்டனம்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில அலுவலகமான 'பாலன் இல்லம்' மீது தாக்குதல் நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தத் தாக்குதலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) வன்மையாகக் கண்டிக்கிறது.

ஆளுநர் மாளிகை மீது தாக்குதல் என்று குற்றச்சாட்டு பற்றி ஆளுநரும் அண்ணாமலையும் எழுப்பும் கூக்குரலுக்கும் இந்த தாக்குதலுக்கும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.