ஈபி, ஈடியின் அரசாட்சியும் இந்திய தேர்தல் ஜனநாயகத்தை மேலும் மேலும் கேலிக்கூத்தாக்குவதும்

மோடி அரசாங்கத்திற்கு ஈபியும் (தேர்தல் பத்திரங்கள்), ஈடியும் (அமலாக்க இயக்குனரகம்) அதிகாரத்திற்கான இரண்டு மிகப்பெரிய ஊற்றாக வெளிப்பட்டுள்ளன. ராஜஸ்தான், சட்டிஸ்கரில் தற்போது நடந்து கொண்டிருக்கும் தேர்தல்களில் உண்மையிலேயே ஈடிதான் பாஜகவிற்கான நட்சத்திர பரப்புரையாளராக மாறியுள்ளது. ஈடியின் இருத்தல் நீண்ட காலமாகவே உள்ளது. ஆனால் மோடி அரசாங்கம் என்ன செய்திருக்கிறதென்றால் தனது எதிர்ப்பாளர்களை இலக்காக்க அதனை ஆயுதமாக்கி யிருக்கிறது. கார்ப்பரேட்டு களிடமிருந்து கட்டுப் பாடற்ற, கணக்கில் வராத நிதி பெறுதலை எளிதாக்க, தேர்தல் பத்திரங்களை மோடி அரசாங்கம் தான் உருவாக்கியது; அறிமுகப்படுத்தியது.