தலையங்கம்

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் கால வியூகங்களை அமைத்துக் கொண்டிருக்கின்றன. இந்தியா கூட்டணியைச் சார்ந்த கட்சிகள் தவிர, இதர கட்சிகளில் எந்தக் கட்சி எந்தக் கூட்டணியில் சேரும் என்பது இன்னமும் ஆடு புலி ஆட்டமாகவே இருக்கிறது. நாட்டின் பிரதம அமைச்சரே மீண்டும் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வருகை செய்து கூட்டாளிகளை வலைவீசி பிடிக்க முயற்சிக்கிறார். ஒபிஎஸ் உள்ளிட்டோர் நாங்கள் பிஜேபியிடம் தொகுதி கேட்டிருக்கிறோம் என சொல்லிக்கொண்டு கைகட்டி நின்று கொண்டிருக்கின்றனர்.