விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒவ்வொரு ஆண்டும் அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் உள்ளிட்ட பெருந் தலைவர்கள் பெயரில் விருது வழங்கி வருகிறது. 2023ஆம் ஆண்டிற்கான அம்பேத்கர் சுடர் விருதினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் திபங்கர் அவர்களுக்கு அளித்து கவுரவித்துள்ளது. விருது வழங்கு நிகழ்ச்சி மே 28 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது. பெரியார் ஒளி விருது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் து.ராஜா அவர்களுக்கும் மாமனிதர் மார்க்ஸ் விருது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களுக்கும் வழங்கி சிறப்பித்துள்ளது.