Recognising Fascism in India: If Not Now, Then When?

Recognising Fascism in India: 

If Not Now, Then When? 

Ahead of the forthcoming 24th Congress of the CPI(M), an internal note issued by the party polit bureau, and widely reported in the media, has attracted more public attention than the draft resolution released earlier. The draft, in a couple of places, had used the expression 'neo-fascist characteristics' to describe the current political situation and the Modi government.

முன்மொழியப்பட்டுள்ள வக்ஃப் (திருத்த) மசோதாவை திரும்பப் பெற வேண்டுமென இககமாலெ மக்களவை உறுப்பினர்கள் கோரிக்கை

முன்மொழியப்பட்டுள்ள வக்ஃப் (திருத்த) மசோதா 2024 சம்பந்தமாக, இகக(மாலெ) மக்களவை  உறுப்பினர்கள் தோழர் ராஜாராம் சிங், தோழர் சுதாமா பிரசாத் ஆகியோர் கூட்டு நாடாளுமன்ற கமிட்டிக்கு செப்டம்பர் 12, 2024 அன்று சமர்ப்பித்த கடிதத்தில் பின்வருவனவற்றை வலியுறுத்தியுள்ளனர்.

அமித்ஷா ஏன் அம்பேத்கருக்கு அஞ்சுகிறார்?

ந்தியா ஒரு இந்து ராஜ்யமாக இருக்க வேண்டும்; அதற்கு மனுஸ்மிருதி அரசமைப்புச் சட்டமாக இருக்க வேண்டுமென்று சங்கிப்படைகள் எப்போதுமே விரும்பின. அம்பேத்கர் இந்திய அரசமைப்புச்சட்ட வரைவுக்கமிட்டிக்கு தலைமை தாங்கினார். அது, இந்தியாவின் குடிமக்கள் அனைவருக்கும் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை வழங்கும் உறுதிப்பாடு கொண்ட இறையாண்மை உள்ள சோசலிச மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு இந

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு: சாதனைகளும், பாடங்களும் சவால்களும்

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு: 

சாதனைகளும், பாடங்களும் சவால்களும்

இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தொடங்கப்பட்டு நூறாண்டுகள் ஆகின்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட நாள்  குறித்து பல்வேறு கருத்துகள் இருந்தாலும், சிபிஐ மற்றும் சிபிஐ(எம்எல்) கட்சிகள், 1925 டிசம்பர் 26 அன்று சிபிஐ ஒரு கட்சியாக தொடங்கப்பட்டதாக அங்கீகரிக்கின்றன.

தோழர் என் கே பெயரால் உறுதி ஏற்போம்; புரட்சிகர கம்யூனிஸ்ட் அரசியல் கட்சியாக முன்னேறிச் செல்வோம்!

தோழர் என்கே நம்மை விட்டு பிரிந்து இரண்டாண்டுகளாகின்றன. 2022, டிசம்பர் 10 (மனித உரிமை நாள்) அன்று திண்டுக்கல் மாவட்டக் கமிட்டிக் கூட்டத்திலிருந்தபோது, இறந்தார் என்ற செய்தி ஒட்டுமொத்த கட்சியையும் அதிர்ச்சியடைய வைத்தது. எழுபதுகளின் பிற்பாதியில் திண்டுக்கல்லிலிருந்து தொடங்கிய தோழர் என் கே வின் புரட்சிகர பயணம் 2022 ல் திண்டுக்கல்லிலேயே முடிவுக்கு வந்தது. ஆனால், ஏறத்தாழ அவரது அரை நூற்றாண்டுகால கம்யூனிஸ்ட் வாழ்க்கைப் பயணம் நம்மை தொடர்கிறது.

வெறுப்பு அரசியலை வேரறுப்போம்! மக்கள் விரோத அரசியலை எதிர்த்து நிற்போம்!

நினைவேந்தல் என்றால் அந்த தோழரின் பெருமைகளை பேசுவது, ஒரு நிகழ்ச்சி நடத்துவது எல்லாம் அவசியம்தான். ஆனால், அத்தோடு நின்று போய்விடக் கூடாது. மாறாக, அந்த தோழரின் லட்சியம், கனவு, நோக்கம் என்னவாக இருந்தது, அதை நிறைவேற்றிட நாம் இன்று என்ன பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதே அடிப்படையானது. 

இன்றைய அரசியல் சூழலில் பாசிசத்திற்கு எதிரான போராட்டம் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என தோழர் என் கே விரும்பினார். கட்சி அதற்காக அனைத்து விதங்களிலும் முயற்சித்து வருகிறது. அதில் நாம் என்ன செய்கிறோம் என்பது முக்கியமானது.

தோழர் வினோத் மிஸ்ராவின் 26வது நினைவுநாள்:

ரலாற்றின் முக்கியமான பிரச்சனைகள் எப்போதும் தெருக்களில்தான் தீர்வு காணப்படுகின்றன என்று தோழர் வினோத் மிஸ்ரா, 1998 டிசம்பரில் மத்தியக் கமிட்டிக்கு  அளித்த இறுதிக் குறிப்பின் மூலம் நமக்கு நினைவூட்டியிருந்தார். ஏற்கனவே, தனது அருவறுப்பான தலையைத் தூக்கத் தொடங்கிவிட்டிருந்த பாசிசத்தின் அச்சுறுத்தலுக்கெதிராக  அனைத்தும் தழுவிய முன்முயற்சியை மேற்கொள்ளுமாறும், போராட்டத்தை தீவிரப்படுத்துமாறும் இளம் கம்யூனிஸ்டுகளுக்கு தோழர் வி எம் அழைப்பு விடுத்திருந்தார்.

பசித்தோருடன் ஆணவத்துடன் விளையாடிய பாஜக ஆட்சிக்கு பாடம் புகட்டிய மக்கள் போராட்டங்கள்.

 1952 பொதுத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் கட்சியால் வெளிச்சந்தையிலும் ,பொது விநியோகத் திட்டத்திலும் மக்களின் முக்கிய உணவுப் பொருளான அரிசியை குறைந்த விலையில் விநியோகிக்க முடியவில்லை. நாடு முழுவதும் 1960 களில் நகர்புரங்களில் பொது விநியோகத் திட்டம் பகுதி அளவில் துவங்கப்பட்டது. 

டாஸ்மாக் மதுக்கடைகளை மூடப் போராடிய தோழர்களை கைது செய்து சிறையில் அடைத்ததற்கு இகக(மாலெ) கண்டனம்!

வேலூர் மாநகரம் பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் பெரும் இடையூறாக  உள்ளதாகக் கூறி பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து சிபிஐ(எம்எல்) கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்து மேற்படி டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தப்பட்டது. ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப் படாததால் பொதுமக்களை திரட்டி சிபிஐ(எம்எல்) கட்சியின்  வேலூர் மாவட்டச் செயலாளர் சரோஜா தலைமையில், டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம், குறிச்சி ஊராட்சி மக்களுக்கு பட்டா கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி, 40 கி.மீ நடைபயணம்: தோழர்கள் கைது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், குறிச்சி ஊராட்சி மக்கள், தாங்கள் வசித்து வரும் வீட்டுமனைகளுக்கு, பட்டா  கேட்டு இரண்டாண்டு காலமாக  தொடர்ந்து  போராடி வருகிறார்கள். சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் மற்றும் வருவாய் நிர்வாகம் பட்டா  கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறது.