கள்ளச் சாராய வியாபாரிகள் - காவல்துறை கூட்டு முறியடிக்கப்பட வேண்டும்!* *தமிழ்நாட்டில் முழுமையான மது­வி­லக்கு வேண்டும்!* *இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) வலியுறுத்தல்*!

தமிழ்நாட்டில் நேற்று இருவேறு இடங்களில் நடைபெற்ற கள்ளச் சாராய விற்பனையால் குடித்த 14 பேர் பலியாகி உள்ளனர். 
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் 9 பேர் உயிரிழப்பு, 43 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போல, செங்கல்பட்டு மாவட்டத்தில் சித்தாமூரில் 5 பேர் உயிரிழப்பு 7 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வரலாற்றில் தடம் பதித்த 11ஆவது கட்சிக் காங்கிரஸ் சொல்லும் செய்தி

இதுதான் இகக(மாலெ) விடுதலையின் 11ஆவது கட்சிக் காங்கிரஸின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த செய்தியும் அரசியல் முழக்கமும் ஆகும். கட்சி அணிகளுக்கும் அனைத்து இடது மற்றும் ஜனநாயக சக்திகளுக்கும் நாடெங்கிலுமுள்ள போராடும் மக்களுக்கும் ஒரு மிகத் தெளிவான அழைப்பாகும்.-ஒரு நீண்ட கால புரட்சிகர கண்ணோட்டத்தில் இன்று நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் மிகவும் அவசரமான அரசியல் பணிகளாக ஒவ்வொருவரும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாகும்.

பாசிஸ்டுகளுக்கு ஒரு சரியான அடியை கர்நாடகா வழங்கட்டும்

முக்கியத்துவம் வாய்ந்த 2024 நாடாளு மன்றத் தேர்தலுக்கு முன்னதாக, மே 10ஆம் தேதி நடைபெற உள்ள கர்நாடக சட்டமன்றத் தேர்தல் தொடங்கி, இந்த ஆண்டு மேலும் ஆறு சட்ட மன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. கடந்த இரண்டு பத்தாண்டுகளாக, பாசிசப் படை யணியின் தெற்கு நோக்கிய பயணத்திற்கான முக்கிய ஆய்வகமாக கர்நாடகம் உருவாகி யுள்ளது. 2014ல் மத்தியில் மோடி ஆட்சி அரியணை ஏறியதன் மூலம் அதிகாரம் பெற்ற பாசிச சக்திகள், புகழ்பெற்ற பகுத்தறிவு சிந்தனையாளர் எம்.எம்.கல்புர்கி, சமூக ஆர்வலரும் பத்திரிக்கையாளருமான கவுரி லங்கேஷ் ஆகியோரின் படுகொலையின் மூலம் தங்கள் நோக்கத்தை தெளிவாக வெளிப்படுத் தினர்.

கட்சி துவக்க நாள் உறுதிமொழி

ஏப்ரல் 22, 2023 இகக(மாலெ) தோற்று -விக்கப்பட்டதன் 54வது ஆண்டு. இந்த தருணத்தில், தோழர் சாருமஜும்தாருக்கும் கட்சியை தோற்றுவித்த மற்ற தலைவர்களுக்கும் கட்சியை வலுப்படுத்தவும் புரட்சிகர இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லவும் கடந்த 54 ஆண்டு களாக தங்களது அனைத்தையும் தியாகம் செய்தவர்களுக்கும் புரட்சிகர அஞ்சலியை செலுத்துகிறோம். ஏப்ரல் 22, உலகின் முதல் சோசலிச புரட்சியின் முதன்மை சிற்பியும் மார்க்ஸ் எங்கல்சுக்குப் பிறகு மார்க்சிய தத்துவம், நடைமுறையின் ஆகச் சிறந்த பிரதிநிதியுமான தோழர் லெனினது பிறந்த நாளுமாகும்.

மோடி ஆட்சியால் கட்டவிழ்த்து விடப்படும் தங்கு தடையற்ற அவசரநிலையை எதிர்ப்போம்

திரிபுராவில் குறுகிய வெற்றியில் அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்ட மோடி அரசாங்கம், இந்தப் பாசிச ஆட்சியின் அடையாளமாக மாறியுள்ள தெரு அதிகாரம், பரப்புரை, அரசு அதிகாரம் ஆகியவற்றின் கொடிய சேர்க்கையை பயன்படுத்தி, எதிர்க்கட்சிகளுக்கு எதிராக முழுமையான தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

நீதிக்கான போராட்டத்தில், ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் ஒன்று சேருவோம். அதுதான் தோழர் சந்திரபோசுக்கு செலுத்தும் பொருத்தமான அஞ்சலி

அனைவருக்கும் வணக்கம்!

தோழர் சந்திரபோஸ் நினைவஞ்சலி கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ள கட்சி சிவகங்கை மாவட்டத் தலைமைக் குழுவுக்கு பாராட்டுகள்.

தோழர் செந்தமிழ், இது கந்தக பூமி என்று சொன்னார். இந்த பூமியை எந்தப் பக்கம் உரசினாலும் தீப்பிடித்துக்கொள்ளும் என்று சொன்னாரா? எப்படி வேண்டுமானாலும் தீப்பிடித்துக்கொள்ளும் என்று சொன்னாரா? எப்போது வேண்டுமானாலும் தீப்பிடித்துக் கொள்ளும் என்று சொன்னாரா? தெரியவில்லை. அவர்தான் சொல்ல வேண்டும்.

இகக(மாலெ)யின் 11வது காங்கிரஸ்: சவால் மிக்க பாதையில் ஒரு உத்வேகமூட்டும் பயணம்!

கம்யூனிஸ்ட் கட்சி பாரம்பரியத்தில், கட்சிக் காங்கிரஸ், குறிப்பிட்ட அந்த சூழலில்  மேற்கொள்ளவிருக்கும் வழியை வகுத்தளிக்கும் மிக உயர்ந்த அமைப்பாகும். இந்தியாவில் தற்போதுள்ள சூழலானது, சுதந்திரத்துக்குப் பிந்தைய நாட்களில் கம்யூனிஸ்ட் இயக்கம் சந்தித்தவற்றிலேயே மிகவும் சவால் மிக்க சூழலாகும். இத்தகைய பின்புலத்தில், இகக(மாலெ)வின் 11வது காங்கிரஸ், கட்சியின் உள்ளார்ந்த வலுவையும் விரிவடைந்து வரும் அமைப்பையும் பாசிச மோடி ஆட்சிக்கு எதிராகவும் சங்கப் படைக்கு எதிராகவும் மக்கள் எதிர்ப்பை தீவிரப்படுத்துவதற்கான வளர்ந்து வரும் முன்முயற்சி, தலையீட்டை இயங்காற்றல் மிக்க வகையில் நிகழ்த்திக் காட்டியதெனலாம்.

வடகிழக்கு மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து இகக(மாலெ) அறிக்கை

திரிபுராவில் பாஜகவிற்கு வாக்கு சதவீதம் மற்றும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கை சரிந்தாலும், பாஜக ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. குஜராத் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களைப் போலவே, திரிபுராவிலும், தேர்தலுக்கு ஒரு வருடம் முன்னதாகவே முதலமைச்சரை மாற்றியதன் மூலம், மாநில ஆட்சிக்கு எதிர்ப்பை பாஜக தெளிவாகக் குறைக்க முடிந்தது. திரிபுராவின் பழங்குடியின மக்களிடையே மக்கள் ஆதரவுடன் பிராந்தியக் கட்சியாக திப்ரா மோதா தொடர்ந்து எழுச்சி பெற்றிருப்பது திரிபுரா தேர்தல்களின் மிக முக்கியமான அம்சமாகும். திப்ரா மோதாவின் எழுச்சி மும்முனைப் போட்டியில் பாஜக தனது அரசாங்கத்தை காப்பாற்ற மிகப்பெரிய உதவியாக மாறியுள்ளது.

நமது தலையாயக் கடமை “நமது சொந்த அரசியல் பலத்தை, வெகுமக்கள் அடித்தளத்தைக் கட்டியெழுப்புவதே!”

நமது செயலுக்கு அடிப்படையாகவிருக்கும் கம்யூனிஸ்ட் கோட்பாடுகள் மத்திய கமிட்டிக்கும் பொருந்தும். பலமாக இருந்தாலும் பலவீனமாக இருந்தாலும் அது மத்தியக் கமிட்டி யையும் உள்ளடக்கியதுதான். அந்த உணர்வின் அடிப்படையில்தான் இந்த அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

சோவியத் சோசலிச குடியரசுகள் வீழ்ந்த பின்னர், பலரும் தங்களைக் கம்யூனிஸ்ட்டுகள் என்று சொல்லிக் கொள்வதிலிருந்து, சப்தமே எழுப்பாமல் வெளியேறினர். அப்போதுதான் நாம் வெளிப்படை செயல்பாட்டுக்கு வந்திருந்தோம். நாங்கள் கம்யூனிஸ்ட் கட்சியினர் என்று உரத்துச் சொன்னோம்.

அலைகுடா குவாராவிற்கு வரவேற்பு

புரட்சியாளர் சேகுவாராவின் மகள் அலைடா குவாரா இந்தியாவிற்கு வந்தபோது டெல்லியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் இகக(மாலெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர், இகக பொதுச் செயலாளர் து.ராஜா, இகக(மா) பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி, ஆர்ஜேடி நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் ஜா, கியூபாவின் தூதர் அலெக்ஸாண்டர் சிமன்காஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்வில் பேசிய அலைடா, பொருளாதார தடை பற்றி பேசுவது எளிதானது. ஆனால், அதை நேரில் அனுபவிக்கும்போதுதான் அது எவ்வளவு கஷ்டமானது என்பதை உணரமுடியும் என்றார். அவர் மேலும் நாங்கள் பொருளாதாரத் தடைக்கு எதிராக பல ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கிறோம்.