அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கட்டுமான தொழிலாளர்களின் மாநாட்டுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மோடி ஆட்சி இ-ஸ்ரம் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதன் நோக்கம் நலவாரியத்தில் கையிருப்பில் உள்ள பணத்தை எடுத்து ஊக வணிகத்தில் முதலீடு செய்வதாக உள்ளது. எப்படி விவசாயிகள் விரோத 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் போராடி விவசாயிகள் அந்த சட்டங்களை திரும்பப் பெற வைத்தார்களோ அதைப்போல அதிலிருந்து பாடங்களை கற்றுக் கொண்டு நாம் செயல்பட வேண்டும். ஒன்றிய மோடி அரசு திட்டமிட்ட விஷம, வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது. தமிழ்நாட்டில் இந்தி பேசும் மக்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பினார்கள். பீகாரில் உள்ள இகக(மாலெ) சட்டமன்ற உறுப்பினர்கள், வதந்தியை நம்ப வேண்டாம் என்றும் வதந்தியை பரப்புவோர்களை அம்பலப்படுத்தியும் பிரச்சாரம் செய்தோம். நாங்கள் தமிழக மக்கள் அமைதியை விரும்புபவர்கள் என்றும் அவர்கள் சகோதரத்துவத்தை நேசிப்பவர்கள் என்றும் சொன்னோம். இந்த காலகட்டத்தில் ஆட்சியாளர்கள் அனைத்து பிரிவு மக்கள் மீதும் தாக்குதலை கொடுத்துள்ளனர் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த ஆட்சியை தோற்கடிப்போம்.