சேலம் மாவட்ட சிபிஐஎம்எல் அம்மாப்பேட்டை, குமரகிரிப் பேட்டை உள்ளூர் கமிட்டிகள் சார்பில், 04.09.23 அன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொழிலாளர்களின் வேலை, கூலி, சமூகப்பாதுகாப்பு, வீடு, வீட்டு மனைப்பட்டா, வாழ்வாதாரம் மற்றும் உயிர் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோழர் ஜெயராமன் தலைமை தாங்கினார். இகக(மாலெ) மத்திய கமிட்டி உறுப்பினர் சந்திரமோகன், மாவட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன், பி.அன்பு, வி.பாலு, அ.வேல்முருகன், ஜி.சுந்தரராஜன், கே.நடராஜன் ஆகியோர் உரையாற்றினர்.