எளிய, கிராமப்புர பின்புலத்தைக் கொண்ட இளைஞர் குமரேசன். காவல்துறையின் கடைநிலை ஊழியர். ரயில்வண்டிக்கு குண்டு வைத்தவர்களாக அறியப்படும் தமிழர் மக்கள் படையின் தலைவர் பெருமாள் வாத்தியார். 'கோஸ்ட்' எனப்படும் பெருமாள் வாத்தியாரை பிடிக்க காவல்துறையினர் முகாமிட்டுள்ள மலைப்பகுதிக்கு மாற்றலாகி பணியாற்ற வருகிறார் குமரேசன். மலைவாழ் மக்களோடு எளிதாகப் பழகுகிறார். மலைவாழ் மக்களின் துன்பங்களில் உதவி செய்யும் மனித நேயமிக்கவராகவும் உள்ளார். அதனால் உயரதிகாரியிடம் பகை ஏற்படுகிறது. கடும் தண்டனைக்கு ஆளாகிறார். ஆனாலும் தான் தவறு செய்யவில்லை எனக்கூறி மன்னிப்பு கேட்க மறுக்கிறார்.