ரயில் பயணிகளுக்கு விரதச் சாப்பாடு! 100 நாள் வேலை தொழிலாளிக்குக் காயுது வயிறு! மோடி அரசின் வேதனை!!

பார்ப்பன வழிபாட்டுமுறையின்படி "இரயில் பயணிகளுக்கு வெங்காயம், பூண்டு சேர்க்காத விரதச் சாப்பாடு நவராத்திரியின் போது கொடுக்கப் படப்போவதாக" இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. அவர்கள் கவனம் எங்கே இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. இந்திய அரசின் திட்டமிட்ட செயல் பாட்டால், இந்தியாவில் வேலையுறுதிச் சட்ட வேலை அட்டை வைத்திருக்கும் 15.63 கோடி ஏழை குடும்பங் களுக்குச் சாதாரணச் சாப்பாடே பறிபோகிறது. பார்ப்பன இந்துப் பண்பாட்டைக் காப்பாற்றுவதில், அல்லது அதுபோல நடிப்பதில் உள்ள கவனம் சட்டக் கடமையை நிறைவேற்றுவதில் இந்த அரசுக்கு இல்லை.