தோள் சீலைப் போராட்டம் 200 ஆண்டுகள்: போராட்டம் தொடர்கிறது!

தோள் சீலைப் போராட்டம், மானுட மாண்பை, பெண்களது தன் மானத்தை மீட்டுக் கொள்வதற்கான உரிமைப் போராட்டம். சமுதாயத்தின் சரிபாதி பெண்களது இந்தப் போராட்டம் மொத்த சமுதாயத்தின் போராட்டமாகும். இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த, பற்றிப் படர்ந்த உக்கிர மிகுந்த இந்தப் போராட்டம், ஆகச்சிறந்த பண்பாட்டு, அரசியல், பொருளாதாரப் போராட்டமாகும்.