இகக(மாலெ) தஞ்சையில் 24.7.2022ல் நடத்திய காவிப் பாசிச எதிர்ப்பு மாநாடு

காவிப் பாசிசத்தை வீழ்த்திடுவோம்! புதியதோர் சமத்துவ சமுதாயத்தைப் படைத்திடுவோம்!! என்ற முழக்கத்துடன் 24.7.2022 அன்று தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை சாலை, காவேரி திருமண மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) காவிப் பாசிச எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. தஞ்சை நகரத்திலும் மாநாட்டு மண்டபத்திலும் செங்கொடிகள் செங்கதிரொளியினூடே பறக்க, தோழர்கள் சந்திரகுமார் சந்திரசேகர்-சுப்பு பெயரிடப்பட்ட அரங்கத்தில் மாலை 3.30 மணிக்கு கோவை நிமிர்வு கலைக்குழுவினரின் தப்பாட்டத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. மாநாட்டிற்கு இகை(மாலெ) தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் என்.கே.நடராஜன் தலைமை தாங்கினார்.