இலங்கையில் மாணவர்கள் மீது போலீஸ் தாக்குதல்

இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் ஜனநாயக சீரழிவுக்கு எதிராகப் போராடிய பல்கலைக் கழக மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த மாணவ செயற்பாட்டாளர்கள் மற்றும் பல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மீதும் புதிதாகப் பதவி ஏற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கே அரசாங்கம் காவல்துறை மூலம் தாக் குத ல் தொடுத்துள்ளது. ஆகஸ்டு 25 அன்று ஆயிரக்கணக்கான மாணவர்களும் செயற்பாட்டாளர்களும் கொழும்பு தெருக்களில் திரண்டார்கள். அவர்கள் சமீபத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுத்த போராட்டக்காரர்களை கைது செய்ததைக் கண்டித்தும் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்யக் கோரினார்கள்.